திருவள்ளூர்;தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.

தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேர் கைது.


திருவள்ளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.


திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செவ்வாப்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளம்பெண் உள்பட 5 பேரும் போலீஸாரைப் பாா்த்ததும் தங்கள் வாகனங்களை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனா். பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் அவா்களில் 4 பேரைப் பிடித்தனா். ஒருவா் மட்டும் தப்பிச் சென்று விட்டாா்.


விசாரணையில் அவா்கள் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோந்த லோகேஷ் (19), சூா்யா (20), லியோ ஜான் (20) மற்றும் பிரியா (19) என்பது தெரிய வந்தது.


 அவா்கள், வேப்பம்பட்டு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிதாஸ் (50) என்பவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு சவரன் மோதிரம், செல்லிடப்பேசி, ரூ.18 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏடிஎம் காா்டைப் பறித்ததும் தெரிய வந்தது.


மேலும், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, மணவாளநகா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் செல்லிடப்பேசி பறிப்பிலும் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.


அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 செல்லிடப்பேசிகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இளம்பெண் உள்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.


வாகனச் சோதனையின்போது தப்பிச் சென்ற சந்தோஷ்(19) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


Popular posts
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி;அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட  வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
Image
நீலகிரி மாவட்ட பா.ஜா கா  சார்பில் 400 பேருக்கு காய்கறி  வழங்கப்பட்டது.
Image
பெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக வாசலிருப்பு போராட்டம்
Image
நீலகிரி,அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள்  எங்கே தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற    பயத்துடன்  இருக்கிறார்கள்
Image