நீலகிரி மாவட்ட பா.ஜா கா  சார்பில் 400 பேருக்கு காய்கறி  வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட பா.ஜா கா  சார்பில் 400 பேருக்கு காய்கறி  வழங்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம்:ஊட்டி காந்தள் குருசடி காலனி பகுதியில், பா.ஜ., இளைஞர் அணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பாக, பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.ஊட்டி காந்தள் பகுதியில், 'சீல்' வைக்கப்பட்ட இடங்களில், கிருமிநாசினி தெளித்து துாய்மை படுத்தும் பணிகளும், மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.



இதை தவிர, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் நாள்தோறும் ஆங்காங்கே வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், ஊட்டி காந்தள் குருசடி காலனி பகுதியில், பா.ஜ., இளைஞர் அணி மற்றும்ஆர்.எஸ்.எஸ்., சார்பாக, பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. அதில், 400 பேர் பயன்பெற்றனர். ஏற்பாடுகளை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் செய்திருந்தனர்.


நீலகிரி மாவட்ட தின ஓசை செய்தியாளர் ஆர் சூரஜ் 8508063861.,



Popular posts
28.04.2020. இன்றைய தினம் ஓசை நாளிதழ் படியுங்கள் பின்பு பகிருங்கள்
Image
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்ரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
அம்பாசமுத்திரத்தில் அதிகரிக்கும் நோய் தொற்று
Image